Monday, January 13, 2014

ஆசிரியர் தினம்

(ஆசிரியர் மாணவர்களிடம்)
நா ஒரு குழில விழுந்துட்டா என்ன பண்ணுவீங்க ?
......
ரமேஸ், நீ சொல்லு
சார் நீங்க வெளில வர எவ்ளோ நேரமாவுதுன்னு கவனிப்பே;
சார் நா இவ மாதிரி சும்மா இருக்கமாட்டே;
வெரிகுட் மகேஷ், நீ என்னபண்ணுவே ?
மண்ணை போட்டு அந்த குழிய நெரப்பிடுவே
அடப்பாவி, சுரேஷ், நீ சொல்லு, 
சார் நா விளையாடப் போய்டுவே
ஏன் ? எப்புடி ?
மகேஷ் மண்ணப் போடுவா, அதனால நீங்க மூச்சி திணறி மண்டையப் போடுவீங்க, அதனால் ஸ்கூல் லீவ் விடுவாங்க, அதனால நா விளையாடப் போய்டுவே;
சார் இவங்க எல்லா நன்றி கெட்ட ஜென்மங்க சார்
தேங்க்யு சிவா, நீ என்ன பண்ணுவே ?
சுதந்திர நாள்ல நீங்க எங்களுக்கு சாக்லேட் கொடுத்தீங்க, அப்டி இப்டி நீங்க செத்துப் போனா எல்லாருக்கு நா சாக்லேட் கொடுப்பே;
கவலையா தெரிரீயே சண்முகம், ஏம்பா ?
நீங்க விழுந்த குழிய வெட்டுனவனுக்கு காசு எப்டி தர்றதுன்னு கவலை சார் எனக்கு
அப்போ என்ன யாருமே கை குடுத்து காப்பாத்தமாட்டீங்க ?
நா காப்பாத்துவே சார்
வெரிகுட் கோபால், வெரிகுட், அப்டி என்னை காப்பாத்துனா ஒனக்கு நா ஒரு வரம் தந்தா நீ என்ன கேப்பே ?
இந்த ஸ்கூல விட்டு நீங்க போய்டுவேன்னு வரம் தந்தா நா காப்பாத்துவே;

No comments:

Post a Comment